இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2 டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்குள் சுருண்டு விட்டது.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தீர்மானித்தது.இதனைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 140.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக விகாரி 111 ,கோலி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் அடித்தனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சி சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது.
இறுதியில் 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே அடித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 34 ரன்கள் அடித்தார் .இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இந்திய அணியைவிட மேற்கு இந்திய தீவுகள் அணி 299 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…