ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Published by
செந்தில்குமார்

இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.

இரண்டுமுறை உலகக்கோப்பை சாம்பியனான, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதன்முறையாக 2023ம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடாமல் தகுதிச்சுற்று ஆட்டத்தோடு வெளியேறுகிறது.

ஏனெனில் சனிக்கிழமையன்று ஸ்காட்லாந்திற்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து மேற்கிந்திய தீவு அணி வெளியேறுகிறது.

இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 36 ரன்களும் எடுத்தனர்.

ஆனால், மேத்யூ கிராஸ் (74), பிராண்டன் மெக்முல்லன் (69) ஆகியோரின் உதவியுடன் 43.3 ஓவர்களில் ஸ்காட்லாந்து வெற்றி இலக்கை எட்டியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஸ்காட்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

1975 மற்றும் 1979 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் உலககோப்பைகளின் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் அணி, 48 ஆண்டுகால வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 அணிகளில் இடம்பெறாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

31 minutes ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

4 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

5 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

6 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

6 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

6 hours ago