நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்

Published by
பாலா கலியமூர்த்தி

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது.

அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து.

#INDVSSA : ஒரே நாளில் 23 விக்கெட்! 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!

இதன்பின், நேற்றே தந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றய நேரம் முடிவில் 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. இதில், குறிப்பாக டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளிலும்(இந்தியா 10, தென்னாபிரிக்கா 13) 23 விக்கெட்டுகள் விழுந்து 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை மீண்டும் படைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர், சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விமானத்தில் ஏறும்போது, தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிஸில் ஆல் – அவுட் ஆனபோது. அதன்பின்னர், விமானத்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று மீண்டும் போட்டியை பார்க்கும்போது தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதன் இடையில் நான் எதை தவறவிட்டேன் என சொல்லுங்கள் என்பதுபோல் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

20 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

43 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

11 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago