எனக்கு அறிவுரை தேவைப்படும் போதெல்லாம், விராட் கோலி எப்போதும் உதவுவார்… பாக் வீரர் புகழாரம்.!

Published by
Muthu Kumar

தனக்கு பேட்டிங்கில் அறிவுரை தேவைப்பட்டால், கோலி எப்போதும் தனக்கு உதவியாக இருந்துள்ளதாக பாகிஸ்தான் வீரர் புகழ்ந்துள்ளார்.

ரன் மெஷின் என்றழைக்கப்படும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது பேட்டிங் திறமை மற்றும்தனது விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு மூலம் ஜொலித்து வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன, அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் கூட இவருக்கு ரசிகர்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது.

இந்த நிலையில் விராட் கோலியின் ரசிகரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், தன்னை விராட் கோலியுடன் ஒப்பிடுவது குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறும் போது எனக்கு விராட் கோலி மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது அதிலும் இந்தியாவின் டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தியதும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.

அதிலும் கிரிக்கெட் வீரராக அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. அவர் கிரிக்கெட்டுக்காக தன்னை செதுக்கியுள்ளார் என்றே கூறலாம், அந்த அளவிற்கு அவரது பேட்டிங்கில் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர்.

நான் இதுவரை பார்த்ததில் எந்த வீரரும் இந்த அளவிற்கு தன்னை உருவாக்கியதில்லை. அதாவது அவர் சில மாதங்களுக்கு முன்பாக வரை பேட்டிங்கில் பார்மின்றி தவித்து வந்தார், மேலும் சதம் அடிக்க முடியாமலும் திணறி வந்தார். ஆனால் சமீப காலங்களில் அவர் பேட்டிங் திறன் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி உள்ளது.

ஐபிஎல் தொடர் உட்பட அடுத்தடுத்து சதம் அரைசதம் என ரன்களை குவித்து வருகிறார். நாங்கள் இருவரும் அவ்வப்போது பேசிக் கொள்வோம். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார். எனக்கு பேட்டிங்கில் எப்பொழுது அறிவுரை தேவைப்பட்டாலும் நான் அவருக்கு போன் செய்து பேசும்போது அவர் எனக்கு பேட்டிங்கை மேம்படுத்த உதவியுள்ளார். அவர் இன்னும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் கூறுவேன் அவரிடமிருந்து இன்னும் சிறந்த ஆட்டங்கள் பல வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன் என அகமது ஷெஷாத் கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

35 minutes ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

1 hour ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

3 hours ago

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

4 hours ago

“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

4 hours ago

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

5 hours ago