இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்..? குஜராத் மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெரும் 2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை.

நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் தகுதி சுற்று (Qualifier 1) போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நேரடியாக இறுதி போட்டிக்குத் தேர்வானது.

இதன்பின், நடந்த முதல் எலிமினேட்டர் (Eliminator) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றிற்கு முன்னேறியது.

இந்நிலையில் முதல் தகுதி சுற்றில் தோல்வியை தழுவிய குஜராத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியும் இன்று நடைபெறவுள்ள 2-வது தகுதி சுற்றில் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

நடப்பு ஐபிஎல்லில் மும்பையுடன் மோதிய இரண்டு போட்டிகளில் குஜராத் அணி ஓரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், இரு அணி வீரர்களும் முழு உத்வேகத்துடன் களமிறங்குகின்றனர்.

இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணியுடன் மோதவுள்ளது. மேலும், இந்த சீசனில் வேறு எந்த மைதானத்தையும் விட அகமதாபாத் மைதானம் அதிக வெற்றியைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago