சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அடித்தது 8/0; ஆனால் கிடைத்தது 7/0.. காரணம் இதுதான்!

Published by
Surya

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ரன்கள் அடித்தது. ஆனால் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கு Short Run-னே காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 20-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது.

அதனைதொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. இறுதிவரை போராடிய ஹைதராபாத் அணி, 159 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் சூப்பர் ஓவர் நடந்தது. இந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணியின் அதிரடி பந்துவீச்சாளர் அக்சர் படேல் பந்து வீசினார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 ரன்கள் அடித்தது. ஆனால் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்தது.

அதற்கு காரணம் “Short Run”. இந்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது முதல் ரன்னை ஒழுங்காக எடுக்கவில்லை. அதாவது, கிரிஸ் லைனில் தனது பேட்டைவைத்துள்ளார். கிரிஸ் லைனை பேட் அல்லது கால் கடந்தால் மட்டுமே ரன் வழங்கப்படும். இதனை 3-ம் அம்பையர் பல ரீ-பிலேகளுக்கு பின் உறுதியாக கூறினார்கள். இதனால் ஹைதராபாத் அணியில் ஸ்கொர் 7/0 என்று குறைந்தது.

Published by
Surya

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago