தல ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டம்! தோல்வியை மறந்த தோனி மனைவி சாக்ஷி !

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான்.

சென்னை அணி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் விரும்பி ஆவலுடன் காத்திருக்கும் ஒரு விஷயம் என்றால் தோனி பேட்டிங் செய்ய வருவது பற்றி தான். பல போட்டிகளில் அவர்களுடைய ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது. ஆனால், நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கி சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

தோனி போட்டியில் களமிறங்கியவுடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி….தோனி என கரகோஷமிட்டனர். நேற்று நடந்த இந்த போட்டியில் தோனி 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தமாக 37 ரன்கள் அடித்தார். இருப்பினும் போட்டியில் சென்னை அணியால் வெற்றிபெறமுடியவில்லை. இருந்தாலும் தோனியின் சிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை கண்டு கழித்து சென்றார்கள்.

அப்படி தான் தோனியின் மனைவி சாக்ஷியும் கூட தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்துவிட்டு போட்டியில் தோல்வி அடைந்ததையே மறந்துள்ளார். தோனியை ஆடியதை பார்த்த சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டோம்” என கூறியுள்ளார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago