மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..!

Published by
murugan

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சொதப்பிய இந்தியா: 

அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு எந்த வீராங்கனையும் 20 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் சார்லட் டீன் 4, அன்யா ஷ்ருப்சோலி 2 விக்கெட்டை பறித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டை பறித்தனர்.

135 ரன்கள் இலக்கு:

135 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாமி பியூமண்ட், டேனியல் வியாட் இருவரும் தலா 1 ரன் எடுத்து வெளியேறினர். பின்னர் இறங்கிய ஹீதர் நைட், நடாலி ஸ்கிவர்  இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய நடாலி ஸ்கிவர் 45 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர்  அதிரடியாக விளையாடிய கேப்டன் அரைசதம் விளாசி 53* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இங்கிலாந்து வெற்றி: 

இறுதியாக இங்கிலாந்து அணி 31.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 4 போட்டிகள் விளையாடியிருக்கும் இந்தியாவுக்கு இது இரண்டாவது தோல்வி.

 

Published by
murugan
Tags: CWC22ENGvIND

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

19 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago