Suryakumar Yadav [Image source : X/@sportstiger]
கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால் ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் வருத்தத்துடன் கண்களில் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
இந்த உலக கோப்பையைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் களமிறங்க உள்ளது. இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகள் 5 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.
அதன்படி, முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணியளவில் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், உலக கோப்பை இறுதிப்போட்டி ஏமாற்றம் அளித்ததாகவும், ஆனால் தங்களது விளையாட்டு குறித்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, ” வெளிப்படையாகக் சொல்லவேண்டும் என்றால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது.”
“ஆனால் நீங்கள் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது அது சிறப்பான ஒரு பயணமாக இருந்தது. எங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் இந்தியா முழுவதும் நாங்கள் எங்கள் திறமையை மைதானத்தில் வெளிப்படுத்திய விதம் மிகவும் பெருமையாக இருந்தது. நாங்கள் போட்டி முழுவதும் கிரிக்கெட்டின் பாசிட்டிவ் பிராண்ட்டாக விளையாடினோம். அதற்காக நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.” என்று கூறினார்.
மேலும், இந்த டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாகவும், ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…