உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை..!

Published by
murugan

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி பகல் 3 மணிக்கு மோதவுள்ளது.

கிரிக்கெட்டில் தற்போது வரை ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி உலக கோப்பையை நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால், 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை 9 அணிகள் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடினர். இதில் 3 தொடர் வெளிநாட்டில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழக்கப்பட்டது.

2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 60 புள்ளிகளும், 3 போட்டி கொண்ட தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகளும், 4 போட்டிகள் என்றால் வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகளும் வழங்கப்படும். போட்டி டிரா ஆனால் வெற்றி புள்ளியில் 3-ல் ஒரு பங்கு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பல போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனால் போட்டிகள் தள்ளிவைக்க வைக்கப்பட்டது. சில டெஸ்ட் தொடர்கள் ரத்தும் செய்யப்பட்டது. இதனால், ஐ.சி.சி வெற்றிக்கு வழங்கப்படும் புள்ளிகளுக்கு பதில் சதவீதம் அடிப்படையில் வழங்கியது. இதன், காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்திய கட்டாயம் வெற்றி பெற வேண்டம் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து உடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. பின்னர், இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பை பெற்றது. இந்திய அணி 5 தொடர்களில் வெற்றி, நியூசிலாந்து அணியுடன் விளையாடிய தொடரில் தோல்வியையும் தழுவி 72.2  சதவீதத்துடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

நியூசிலாந்து அணி 5 தொடரில் விளையாடி 3-ல் வெற்றியும் ஒரு தொடரில் டிராவும், ஒரு தொடரில் தோல்வியையும் தழுவி 70 சதவீதத்துடன் 2-வது இடத்திற்கு முன்னேறியது.  ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி இதுவரை 1983-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2002-ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கை அணியுடன் பகிந்து கொண்டது. பின்னர், 2007-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என 5 கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஆனால், விராட் கோலி கேப்டன் பதவியேற்ற பிறகு இந்திய அணி ஐ.சி.சி நடத்திய எந்த கோப்பையையும் வென்றதில்லை. கோலி தலைமையில் இந்திய அணி 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரைஇறுதியிலும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று இந்திய நேரப்படி பகல் 3 மணிக்கு மோதவுள்ளது.

இந்தியா அணி:

ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

டிவான் கான்வே, டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

32 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

48 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago