முக்கியச் செய்திகள்

WorldCup2023: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. கோலி, கே.எல் ராகுல் அதிரடி..!

Published by
murugan

இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  உலகக்கோப்பையின் 5  வது லீக் போட்டி  சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்  மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் உடன்  வார்னர் கை கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 69 ரன்கள் சேர்க்கப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 41 எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க  நிதானமாக விளையாடிய ஸ்மித்  46 ரன்னில் ஜடேஜாவிடம் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மத்தியில் களம் கண்ட மிட்செல் ஸ்டார்க் மட்டும் 28 ரன்கள் எடுக்க இறுதியாக  ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் ஆல் அவுட்  ஆகி 199 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில்  ஜடேஜா 3 விக்கெட்டையும் , குல்தீப் , பும்ரா தலா  2 விக்கெட்டையும் , முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 200ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 4 பந்தில் இஷான் கிஷன் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் அடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க 2-வது ஓவரின் 3 பந்தில் ரோஹித்தும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இந்திய அணி 2 ரன் எடுத்து 3 விக்கெட்டை கொடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி கே.எல் ராகுல் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடிய கோலி 116 பந்திற்கு  85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும். இவர்கள் இருவர் கூட்டணியில் 165 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். களத்தில் சிறப்பாக விளையாடிய  கே.எல். ராகுல் 115 பந்திற்கு 97* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும் அதேபோல ஹர்திக் பாண்டியா 11* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு உலகக்கோப்பின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

33 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago