ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இளம் வீரர்களின் லிஸ்டில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்.!!

Published by
பால முருகன்

ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் மட்டும் அதிரடியாக விளையாடி 477 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முந்தய ஆண்டுகளை விட இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை விரைவாக அடைந்த இளம் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 130 நாட்களில்  ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு முன்னதாக, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தன்னுடைய 20 வயது  218 நாட்களில் 1,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை  யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ப்ரித்திவ் ஷா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

3 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

3 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

4 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

5 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

5 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

6 hours ago