ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இளம் வீரர்களின் லிஸ்டில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்.!!

Published by
பால முருகன்

ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடி வருகிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் மட்டும் அதிரடியாக விளையாடி 477 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முந்தய ஆண்டுகளை விட இந்த சீசன் அவருக்கு நல்ல சீசனாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை விரைவாக அடைந்த இளம் வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 130 நாட்களில்  ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்லில் 1,000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு முன்னதாக, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தன்னுடைய 20 வயது  218 நாட்களில் 1,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை  யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ப்ரித்திவ் ஷா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

22 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

39 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago