அந்த 6 சிக்சரில் எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாயே – யுவராஜ்சிங் முக்கிய தகவல்

Published by
Castro Murugan

கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது .இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கில் சமுக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவர்  2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்களை பற்றி பகிர்ந்துள்ளார் .

அவர்  2007 ஆம் ஆண்டு நடைபெற்ற  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்ததையும் ஸ்டூவர்ட்டின் தந்தை அதன் பிறகு கூறியதையும் பற்றி சுவாரஸ்யங்களை  பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளின்டாப் என்னை சீண்டினார் இதனால் கடும் கோபத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்தை ஒரு பதம் பார்த்துவிட்டேன் .எனக்கு அந்த 6 சிக்சர்களை அடித்த பின்பு மிகுந்த மகிழ்ச்சி காரணம் என்னவென்றால் அதற்கு முந்தைய சில வாரங்களுக்கு முன்னால்தான் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் ஒருநாள் போட்டியில் எனது ஓவரில்  5 சிக்சர்களை அடித்திருந்தார் .சிக்சர்களை அடித்த பின்பு பின்பு பிளின்டாப்பை பார்த்தேன் பின்பு  மாஸ்கரனாஸ் பார்த்தேன் அவர் சிரித்தார் .

பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் என்னை வந்து சந்தித்தார் . ஆவர் இத்தொடரின் நடுவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் என்னிடம் வந்து நீ என்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய்.இப்பொழுது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.

நான் இந்திய கிரிக்கெட் அணியின் பனியனில் சில வாசகங்களை எழுதினேன் அது என்னவென்றால் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5  சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது, அதன் வேதனையை நான் அறிவேன் .இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று எழுதினேன் .

இன்று ஸ்டூவர்ட் பிராட் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக  திகழ்கிறார்.இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை என்று யுவராஜ்சிங் கூறினார் .அவர் ஊரடங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சமூகவலைதளங்களில் நேரலையில் கேள்விகள் கேட்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

21 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

51 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago