பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்று நடைபெறும் 22ஆவது ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகிறது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி பேட்டிங் செய்தது.
இந்த நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய உத்தப்பா, சிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி, இருவரும் அரைசதம் அடித்தனர். உத்தப்பா 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன், 8 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், துபே 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு, 216 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோற்ற நிலையில், அதனை தொடர்ந்து, கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளுடன் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூரை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…