தற்போது பெண்களுக்கான உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் தற்போது அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டு அரையிறுதிப் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதுகிறது.
இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் , ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது. இதில் முதல் போட்டி காலை 08.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று நடக்கும் பல பரிட்சையில் வெற்றி பெற்ற அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லும். அதனால் இன்றைய போட்டி அனைவரும் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வதம் செய்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.இரண்டாவது போட்டி பிற்பகல் 01.30 மணிக்கு தொடங்க உள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…