இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்குப் பிறகு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா , வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலும் தோனி கலந்து கொள்ளாததால் தோனி எப்போது விளையாடுவர் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
தோனி கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வு பெறப்போகிறதா அல்லது தொடரப் போகிறதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு தோனி மௌனம் செலுத்திய வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மும்பையில் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது தோனியின் வருங்கால திட்டம் குறித்த கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.
அதற்கு அவர் ஜனவரி மாதம் வரை என்னிடம் எந்தவித கேள்வி கேட்காதீர்கள் என கூறினார். இதற்கு முன்னதாக தோனி வருங்காலம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி தோனி எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடரை காத்திருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் இந்தியா அணி முக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். ஜனவரி மாதம் மத்தியில்ஆஸ்திரேலியா அணியுடன் ஒருநாள் தொடர்களிலும் , ஜனவரி இறுதியில் நியூஸிலாந்து அணிஉடன் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் இந்த தொடர்களின் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் ஜனவரி மாதம் என தோனி குறிப்பிட்டிருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…