கடைசி நிமித்தத்தில் வெற்றியை உறுதி செய்த இங்கிலாந்து ..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!

Published by
அகில் R

யூரோ கோப்பை : நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

யூரோ கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியானது இன்று அதிகாலை நடைபெற்றது, மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதற்கு ஏற்ப சரியாக போட்டியின் 7’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான சகா இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

மேலும், இங்கிலாந்து அணி அந்த முன்னிலை கோலால் ஆதிக்கம் செலுத்தி வந்தது, அதன்பின் ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியினர் செய்த தவறால் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெனால்டி சூட் கிடைக்கும், அதனை அறிய வாய்ப்பாக எடுத்த இங்கிலாந்து அணியின் கேன் அருமையாக கோலை அடித்து அசத்துவார். இதனால், போட்டி 1-1 என சமநிலைக்கு மாறிவிடும்.

மேற்கொண்டு விளையாடிய 2 அணிகளும் கடுமையாக போராடியும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும், கிடைத்த ஒரு சில கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். யூரோ கோப்பையின் அரை இறுதி போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது என்றே கூறலாம்.

இதனால், 90′ நிமிடங்கள் ஆகியும் இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் விளையாடியதால், போட்டி கண்டிப்பாக பெனால்டி சூட் வரை செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் 90’நிமிடத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்ட 5′ நிமிடத்தில், அதாவது 90’+1 நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வாட்கின்ஸ் அபாரமாக கோலை அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என வெற்றியை உறுதி செய்தது.

மேலும், 4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த யூரோ கோப்பை தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. கடந்த 2020-ல் நடைபெற்ற யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து இறுதி போட்டி வரை சென்று இத்தாலியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

23 minutes ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

2 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

3 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago