இங்கிலாந்தின் யூரோ கால்பந்து வெற்றி;அழுத ஜெர்மன் பெண் குழந்தை – 27,500 யூரோ நிதி திரட்டும் ரசிகர்கள்…!

Published by
Edison

யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பின்னர்,அழுத ஜெர்மன் பெண் குழந்தைக்காக 27,500 யூரோவை நிதியாக திரட்டும் கால்பந்து ரசிகர்கள்.

முதல் முறையாக யூரோ கோப்பை கால்பந்து போட்டியானது ஐரோப்பாவின் 11 நகரங்களில் நடைபெறுகிறது.உலகம் முழுவதும் பரவிய கொரோனா அலை தாக்கம் காரணமாக போட்டியானது 2021-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்,ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில்,செவ்வாயன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிக் கொண்டன.அதில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது.தனது அணி தோல்வியுற்றதால் ஒரு ஜெர்மன் பெண் குழந்தை அழுதபடியே தனது தந்தையை பிடித்துக் கொண்டார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.பின்னர்,அந்த குழந்தை குறித்து இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டனர். மேலும்,ட்விட்டர் பயனர்கள் ஜெர்மன் பெண்ணைப் பற்றிய கருத்துக்களை “அருவருப்பானவை” மற்றும் “ஆபாசமானவவை” என்று விவரித்தனர்.

எனினும்,அந்த குழந்தைக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை பதிவிட்டனர்.அந்த வகையில் ஒருவர்,”ஒரு பெற்றோராக, அழுகிற இளம் ஜெர்மன் பெண்ணை இலக்காகக் கொண்டு தவறான கருத்துகளை பதிவிட்டவர்கள் ஒரு கட்டத்தில் தாங்கள் செய்த காரியத்திற்கு வெட்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,சில கால்பந்து ரசிகர்கள்,சமூக ஊடக கருத்துகளால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த குழந்தைக்காக 27,500 யூரோக்களை நிதியாக திரட்ட முடிவு செய்தனர்.அதன்படி,நேற்று வரை,8,000 யூரோக்கள் திரட்டியுள்ளனர்.

Published by
Edison

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

9 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago