neymar [File Image]
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு விளையாடி வரும் கால்பந்து வீரர், நெய்மர் ஜூனியரின் தந்தை நெய்மர் டி சில்வா சாண்டோஸ், சுற்றுச்சூழல் விதி மீறல் குற்றத்திற்காக பிரேசில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் கடற்கரை நகரமான மங்கராதிபாவில் உள்ள தனது மகனின் குடியிருப்பு பகுதியில், சாண்டோஸ் ஒரு செயற்கை ஏரியைக் கட்டி, சுற்றுச்சூழல் விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த ஏரியை கட்டுவது காடுகளை அழித்தல், பாறை உடைத்தல், நீர் வழித்தடத்தை திசை திருப்புதல், ஆற்று நீரை அனுமதியின்றி உறிஞ்சுதல், செயற்கை ஏரிக்கு நீர் எடுப்பது போன்ற தடை செய்யப்பட்ட போன்ற சுற்றுச்சூழல் மீறல்களில் ஈடுபட்டதால் நெய்மர் டி சில்வா சாண்டோஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனார். இருப்பினும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெய்மர் 2016 ஆம் ஆண்டில் சொத்தை வாங்கினார். இது 10,000 சதுர மீட்டர் (2.5 ஏக்கர்) நிலத்தில் அமைந்துள்ளது மற்றும் ஹெலிபேட், ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…