விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி..! அமெரிக்க கிளப் இன்டர் மியாமியில் சேர வாய்ப்பு..!

Published by
செந்தில்குமார்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பிரெஞ்சு சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அவர் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஸ்பானிஷ் கால்பந்து பத்திரிகையாளர் கில்லம் பலாக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மெஸ்ஸி இண்டர் மியாமியில் இணைய முடிவு செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். மெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) கோப்பையை வென்றார்.

பின், ஆகஸ்ட் 2021-இல் பார்சிலோனா கால்பந்து கிளப்லிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில் சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிரெஞ்சு அணிக்காக 71 முறை விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார். மேலும், 2022ம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அணியின் மூன்றாவது உலகக் கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

20 minutes ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

27 minutes ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

3 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

4 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

5 hours ago