இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னை மது போதையில் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகாரளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர், தனது மகனுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது அங்கு காரில் வந்திறங்கிய பிரவீன்குமார், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென தீபக் சர்மாவுடன் போதையில் தகராறு செய்த பிரவீன்குமார், தீபக் சர்மாவை தாக்கியதுடன் அவரது 7 வயது மகனை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறத.
இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் 2008-ம் ஆண்டும் மருத்துவர் ஒருவரை மது போதையில் தாக்கியதாக பிரவீன்குமார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…