இத்தாலிய முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ காலமானார்!

Published by
Surya

இத்தாலிய நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும், 1982 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என போற்றப்படும் பவுலோ ரோஸீ, உடல்நலக்குறைவால் காலமானார்.

இத்தாலிய நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான பவுலோ ரோஸீ கடந்த 1982-ம் ஆண்டில் ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரடியாக ஆடி 6 கோல்களை அடித்து, அந்த போட்டியின் நாயகனாக ஜொலித்தார். அதனையடுத்து 2004 ஆம் ஆண்டில் பிரேசில் கால்பந்து வீரர் பீலே, உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர் என அவரை புகழ்ந்தார்.

தற்பொழுது 64 வயதாகும் அவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் மறைவிற்கு உலகளவில் இருக்கும் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, கால்பந்து வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

7 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago