நிதி திரட்ட இந்தியா ,பாகிஸ்தான் இடையே போட்டி – அக்தர்.!

Published by
murugan

கொரோனாநோயால்  இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுக்க மக்கள் வீடுகளில்  முடங்கி உள்ளனர்.இதனால் பலரின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா , பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

சோயிப் அக்தர்  கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நிதி திரட்ட  இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டும். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இரு நாட்டினரும்  கவலைப்படமாட்டார்கள்.

விராட் கோலி  சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் சதம் அடித்தால் நீங்கள் உற்சாகமடையுங்கள்.  இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரு நாடுகளின் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என கூறினார்.

மேலும்  ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம். இப்போது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் தற்போது இந்த போட்டியை நடத்த முடியாது. தற்போது இருக்கும் நிலைமையில் இருந்து முன்னேற்றம் காணப்படும்போது இந்த தொடரை துபாய் போன்ற இடத்தில் நடத்தலாம் என அக்தர் கூறினார்.

 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும்  மோதி வருகின்றன.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

28 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago