#Breaking:ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் லவ்லினா வெற்றி -மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு..!..!

Published by
Edison

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெற்றி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை எதிர்கொண்டார்.

முன்னிலை:

ஆட்டத்தின் தொடக்கம் முதலே லவ்லினா தனது திறமையை வெளிப்படுத்தி,முதல் பாதியில்  10 – 9  என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.இதனையடுத்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை லவ்லினா,மீண்டும் 10 – 9  என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

வெற்றி:

இறுதியில்,இந்திய வீராங்கனை லவ்லினா 3-2 என்ற கணக்கில்,ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்ஷை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதனால்,காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.எனவே,இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என நம்பிக்கை எழுந்துள்ளது.போர்கோஹெய்ன் இரண்டு முறை உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

அதேபோல,35 வயதான அபெட்ஷ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஜெர்மன் வீராங்கனை மற்றும் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் ஆவார்.

இதற்கு முன்னதாக,இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

26 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

8 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

11 hours ago