இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் போட்டியில் பெய்த மழை காரணமாக, மூன்றாம் நாள் ஆட்டம் ரத்தானது.
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.
அதன்பின் மாஞ்செஸ்டரில் நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதன்படி, முதல் இன்னிக்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
அதில் அதிகபட்சமாக, பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும், டோமினிக் சிப்ளே 120 ரன்கள் எடுத்து, அதிரடியாக சதம் விளாசினார்கள். அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அங்கு மழை குறுக்கிட்ட காரணமாக, ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்தானது. மேற்கு இந்திய அணியில் அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும், கிரெய்க் பிராத்வைட் 6 ரன்கள் எடுத்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…