Chess World CUp [file image]
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார்.
கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே கண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விரருமான குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பிடே கேண்டிடேட்ஸ் தொடரில் 8 வீரர்கள் கலந்து கொண்டு மோதினார்கள். ஒவ்வொரு வீரரும் தலா 2 முறை அவருகளுக்குள் மோதிக்கொள்ள வேண்டும்.
இந்த சுற்றின் முடிவில் வெற்றி பெறுபவர் அதாவது முதல் இடத்தில் இருக்கும் அந்த நபர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் உலகப்புகழ் பெற்ற கிராண்ட் மாஸ்டரான டிங் லிரினை எதிர்த்து விளையாடலாம். இந்த தொடரின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் உலகச்செஸ் நடப்பு சாம்பியனான டிங் லிரினுடன், குகேஷ் விளையாட உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் நேற்று தெரிவித்தார். இதைப் பற்றி அவர் கூறுகையில்,” நடைபெற இருக்கும் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் பேசி இருக்கிறோம்.
இந்த செஸ் போட்டி இந்தியாவில் நடந்தால் நிச்சயம் ஒரு மிகச் சிறப்பான விஷயமாக அமையும். மேலும், இந்தியாவில் குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது, என்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் பேசி இருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டில் சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்தம், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் இடையேயான உலகத்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், ஆனந்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…