வினேஷுக்கு வெள்ளி பதக்கம் வேண்டும்.! விதிமுறைகளை மாற்றுங்கள்…

Published by
மணிகண்டன்

பாரிஸ் : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்த கருத்துக்கள் இன்னும் பலமாக விளையாட்டு மற்றும் பொது அரங்குகளில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி என்று இருந்த நிலையில் 100 கிராம் எடை அனைத்து இந்தியர்களின் கனவையும் பொய்யாக்கிவிட்டது.

50 கிலோ மல்யுத்த போட்டி எடைப்பிரிவில் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த வினேஷை ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்து, வினேஷிடம் அரையிறுதியில் தோற்ற கியூபா வீராங்கணையை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவித்து இறுதி போட்டியும் நிறைவடைந்துவிட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும் வினேஷ் தகுதி நீக்கத்தில் இருந்து ஒலிம்பிக் கமிட்டி பின்வாங்கவில்லை. இதனை அடுத்து, நேற்று விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை (Court of Arbitration for Sport (CAS)) வினேஷ் போகத் நாடியுள்ளார். முதலில் இறுதி போட்டிக்கு தன்னை அனுப்ப கோரிய கோரிக்கையை மாற்றி , தற்போது, இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தனக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் என்று தற்போது PTI செய்தி நிறுவனம் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே வெள்ளி பதக்க கோரிக்கையை, அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஜோர்டான் பர்ரோஸும் வலியுறுத்தி உள்ளார். வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த ஜோர்டான், அதற்காக குத்துசண்டை விளையாட்டு விதிமுறைகளை மாற்றவும் கோரிக்கை வைத்தார்.

அவர் குறிப்பிட்டபடி உலக குத்துசண்டை சம்மேளத்தில் மாற்றப்பட வேண்டிய விதிமுறைகள் என கூறுகையில்,

  • 1 கிலோ எடை வரையில் எடையாளவில் விலக்கு அளிக்க வேண்டும்.
  • வீரர்களின் எடை சரிபார்ப்பை காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை என இருப்பதை மாற்ற வேண்டும்.
  • இறுதிப் போட்டியாளர் திடீரென எடை குறைந்தால் இறுதிப் போட்டிகளில் தோல்வி ஏற்படும் நிலை உள்ளது அதனை மாற்ற வேண்டும்.
  • அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, 2வது நாளில் எடை தவறவிட்டாலும் இறுதிப் போட்டியாளர்கள் இருவரின் பதக்கங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் கொடுங்கள்.

மேற்கண்ட விதிமுறைகளை மாற்றியமைத்து வினேஷுக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என அமெரிக்க குத்துசண்டை வீரர் ஜோர்டான் உலக குத்துசண்டை சம்மேளனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

44 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

13 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

14 hours ago