இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

Published by
பால முருகன்

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் ரசிகர்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத ஒரு கேள்வி என்னவென்றால்  என்னவென்றால் தோனியின் ஓய்வு பற்றிதான். ஏனென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார்.

குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சென்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் எமோஷனல்!

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கிறார். எனவே, ரசிகர்கள் பலரும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். தோனியும் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு குறித்து தெளிவான எந்த பதிலையும் கூறாமல் இருக்கிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு தோனி ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என தகவல் சமீபத்தில் வெளியானது.

அந்த தகவல் குறித்து சென்னை அணியின்  தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கேள்வியாக கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்  ” தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று எனக்கு தெரியாது. இந்த கேள்வி பற்றி கேப்டன் தோனி நேரடியாக உங்களுக்கு பதில் அளிப்பார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பற்றி எங்களிடம் இன்னும் பேசவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தோனி தற்போது நன்றாக இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக தயாராகிவிடுவார், இன்னும் 10 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்கான வலைப்பயிற்சியை தொடங்குவார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

2 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

2 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

4 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago