இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

Published by
பால முருகன்

அடுத்த ஆண்டு (2024) ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் (டிசம்பர் 19 ) ஆம் தேதி மினி ஏலம் துபாயில் நடந்தது. அதில் ஐபிஎல்லில் விளையாடும் அணிகள்  தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து தற்போது வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில்  விளையாட தயாராகி வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரையில் வழக்கம்போல, அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டனாக செயல்படுவார். இந்த தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் ரசிகர்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத ஒரு கேள்வி என்னவென்றால்  என்னவென்றால் தோனியின் ஓய்வு பற்றிதான். ஏனென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார்.

குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சென்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் எமோஷனல்!

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கிறார். எனவே, ரசிகர்கள் பலரும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். தோனியும் தன்னுடைய ஐபிஎல் ஓய்வு குறித்து தெளிவான எந்த பதிலையும் கூறாமல் இருக்கிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு தோனி ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என தகவல் சமீபத்தில் வெளியானது.

அந்த தகவல் குறித்து சென்னை அணியின்  தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கேள்வியாக கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்  ” தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று எனக்கு தெரியாது. இந்த கேள்வி பற்றி கேப்டன் தோனி நேரடியாக உங்களுக்கு பதில் அளிப்பார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பற்றி எங்களிடம் இன்னும் பேசவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தோனி தற்போது நன்றாக இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக தயாராகிவிடுவார், இன்னும் 10 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்கான வலைப்பயிற்சியை தொடங்குவார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

6 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

9 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago