இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. அந்த வீடியோவில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன், மதுபாலா ஆடிய இருந்து ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு கெவின் பீட்டர்சன் நடனமாடியுள்ளார். இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதற்குமுன் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து சந்தோசமாக இருந்து வருகிறார். இவர், தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இதையடுத்து, இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி” பாடலின் இசைக்கு குடும்பத்துடன் டிக்டாக் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது, இந்த நிலையில், தற்போது கெவின் பீட்டர்சன் ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…