இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து சாதனை நாயகனான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் மிகப்பெரிய சாதனை மைல்கல்லை ஒன்றை எட்ட உள்ளார். அது என்னவென்றால், இதுவரை 240 ஒருநாள் போட்டிகள், 75 டி20 போட்டிகள் மற்றும் 84 டெஸ்ட் போட்டிகளுடன் 399 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இன்று கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார். இதுவரை ரன் குவிப்பு மற்றும் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சாதனை செய்து வந்த கோலி தற்போது போட்டிகளின் எண்ணிக்கையிலும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…