KKR captain Shreyas Iyer [Image Source :x/@ipl]
இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10 அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதனால், எந்தந்த அணிகளுக்கு எந்தந்த வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!
இதுபோன்று, கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டனாக இருந்த நிதிஷ் ராணா, 2024 ஐபிஎல் தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீரின் ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே திரும்பியிருந்தார்.
கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக கம்பீர் வந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை கொல்கத்தா அணி வெளியிட்டிருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் உள்ளிட்ட 13 வீரர்களை அந்த அணி தக்க வைத்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…