2-வது டெஸ்டில் கோலி சதம் ..! ரஹானே அரைசதம் விளாசல் ..!

Published by
murugan

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் தொடங்கியது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, மயங்க அகர்வால் இருவரும் களமிறங்கினார்.
ஆட்டம் தொடக்கத்திலேயே ரோஹித் 14 ரன்களில் வெளியேற பின்னர் புஜாரா ,  மயங்க அகர்வால் இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் நிதானமாக விளையாடி மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்னுடன் வெளியேறினர்.
இவர்களின் 3 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பறித்தார். நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் கோலி 63 ரஹானே 18 ரன்களுடன் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ரஹானே  அரைசதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே கேப்டன் கோலி சதம் அடித்தார். கோலிக்கு டெஸ்ட் போட்டியில் இது 26-வது சதம் ஆகும். மேலும் இந்த வருடம் கோலி அடித்த முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணி 115.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 368 ரன்கள் எடுத்து உள்ளது. கோலி 115 , ரஹானே 59 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

3 hours ago

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

7 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

7 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

8 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

8 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

9 hours ago