டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டிலிருந்து தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள்..!

Published by
Edison

தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற விளையாட்டு வீரர்களைப் பற்றி காண்போம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டிலிருந்து இதுவரை மொத்தம் 11 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். அதில்,5 விளையாட்டுகளில் பங்கேற்கும் 8 விளையாட்டு வீரர்களைப் பற்றி காண்போம்.

டேபிள் டென்னிஸ் – ஷரத் கமல்,மாணிக்க பத்ரா:

டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வாகியுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றது முதல் அவர் கலந்து கொள்ளும் நான்காவது ஒலிம்பிக் போட்டியாகும்.

இந்த போட்டியில், அவர் கலப்பு இரட்டையர் போட்டியில் மாணிக்க பத்ராவுடன் இணைவார். ஏனெனில், அவர்கள் ஆசிய ஒலிம்பிக் தகுதி போட்டியின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் கொரிய ஜோடி சாங்-சு லீ மற்றும் ஜிஹீ ஜியோனை தோற்கடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

சத்தியன் ஞானசேகரன்:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன். கடந்த பிப்ரவரி 2021 இல்,ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 9 முறை சாம்பியனான ஷரத் கமலை தோற்கடித்து தேசிய சாம்பியனானார்.

தற்போது, டோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ரமீஸை தோற்கடித்த பின்னர் சத்தியன் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

படகு போட்டி -அசோக் தாக்கர் & கே.சி. கணபதி:

டோக்கியோ ஒலிம்பிக்கில் படகு போட்டியில் ஆண்கள் 49 er பிரிவில் இந்தியா சார்பாக மாலுமிகள் வருண் அசோக் தாக்கர் & கே.சி. கணபதி பங்கேற்கின்றனர்.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க ஒலிம்பிக் தகுதி நிகழ்வான முசானா திறந்த படகு போட்டி சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்ததன் மூலம் அவர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

நேத்ரா குமனன்:

நேத்ரா குமனன் ஒரு மாலுமி, ஒலிம்பிக்கில் படகுப் போட்டியில் லேசர் ரேடியல் பிரிவில் இந்தியா சார்பாக அவர் போட்டியிடுகிறார். கடந்த 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளின் கடைசி பதிப்பில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு 2020 ஆம் ஆண்டு பாய்மர உலகக் கோப்பை போட்டியில், உலகக் கோப்பை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க ஒலிம்பிக் தகுதி நிகழ்வான முசானா திறந்த படகோட்டம் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பின்னர், லேசர் ரேடியல் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

ஃபென்சிங்:

ஃபென்சிங் வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு உலக தரவரிசைகளின் அடிப்படையில் ஆசியா மற்றும் ஓசியானிக் பிரிவில் இரண்டு தனிப்பட்ட இடங்கள் இருந்தன. ஏப்ரல் 5, 2021 நிலவரப்படி அவர் 42 வது இடத்தைப் பிடித்தார், மேலும் தரவரிசைகளின் அடிப்படையில் அவர் தகுதி பெற்றார், இதன்மூலம், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ‘முதல் இந்திய ஃபென்ஸர்’ என்ற பெருமையைப் பெற்றார்.

தடகளம்:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 4×400 ரிலேவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தடகள வீரர் ராஜீவ் அரோக்கியா. 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற 4×400 மீ கலப்பு ரிலே மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற 4×400 மீ ஆண்கள் ரிலே அணியின் ஒரு பகுதியாக ராஜீவ் இருந்தார்.

மேலும், அவர் 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 4×400 மீ  பிரிவில் ஆண்கள் ரிலே அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இதனால்,இது அவரது இரண்டாவது ஒலிம்பிக்காகும்.

மேற்கூறிய பெயர்களைத் தவிர, தனலட்சுமி சேகர் (கலப்பு 4×400 மீ), வி ரேவதி (கலப்பு 4×400 மீ), சுபா வெங்கடேஷ் (கலப்பு 4×400 மீ) மற்றும் நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4×400 மீ) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணி சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

Published by
Edison

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

2 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

29 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago