ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த மயங்க் அகர்வால்..!

இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி நேற்று முதல் இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா அணி 39 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.இந்நிலையில் இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்கள் சேர்த்துதான் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
மேலும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் ஸ்மித் ஆஷஸ் தொடரில் 211 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஸ்டீவன் ஸ்மித் சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025