மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இறுதியாக நட்சத்திர கால்பந்து வீரர் இந்தியாவில் ஒப்புதல் அளித்து உள்ளார் என்று பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பீடி பாக்கெட்டின் பெயர் மெஸ்ஸி பிரி. இந்த பாக்கெட்டில் மெஸ்ஸியின் புன்னகையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த பாக்கெட் தயாரிப்பு குறித்து அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம் துலியானில் உள்ள ஆரிப் பீடி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் மெஸ்ஸியின் முதல் ஒப்புதல்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கேலி செய்தும், மீம்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…