daryl mitchell family [File Image]
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வீரர்களை தேர்வு செய்து ஏலத்தில் எடுப்பது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பல முக்கியமான வீரர்களை தங்களுடைய அணிக்கு அதிக விலைகொடுத்து வாங்கியது. அந்த வகையில் சென்னை அணி நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் – ஐ 14 கோடிக்கு வாங்கியது. சென்னை அணி தன்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஐபிஎல் ஏலம் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் தான் என்னுடைய மூத்த மகளின் 5-வது பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளின் போது என்னை சென்னை அணி இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்துள்ளது. இதனை என்னுடைய மகளின் பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். எவ்வளவு பெரிய தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என்று என்னுடைய மகளுக்கு சத்தியமாக தெரியாது.
சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்!
ஆனால், சென்னை அணி என்னை இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்துள்ளது எங்கு பெரிய உதவியாக இருக்கும். என்னுடைய குடும்பத்திற்கு இந்த தொகை உதவும். இந்த தொகை மூலம் என்னுடைய குழந்தைகள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு பல விஷயங்களை இந்த தொகையை வைத்து அனுபவிக்க முடியும். என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்காக அளித்த இந்த வாய்ப்பை நான் மிகவும் அதிர்ஷ்ட்டமாக பார்க்கிறேன். சென்னை அணிக்கு எப்போது விளையாடலாம் என்றும் ஆவலுடன் காத்து இருக்கிறேன்” எனவும் டேரில் மிட்செல் சற்று உருக்கமாக பேசியுள்ளார். மேலும் டேரில் மிட்செல் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2024)ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…