இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 278 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இந்திய திணறி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது இறுதியாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து. நியூசிலாந்து அணி சார்பாக மார்ட்டின் குப்டில் 79 ரன்களும், ரோஸ் டெய்லர் 73 ரன்களுடன் அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி பிருத்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் இருவரும் 23, 3 என்ற சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கோலி 15 ரன்களில் சவுத்தி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 28 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் தற்போது விளையாடி வருகிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…