‘போராட மனதில் உறுதியில்லை’! ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் .!!

Published by
அகில் R

பாரிஸ் : பாரிஸில் ஒலிம்பிக் 33=வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நாள் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாகவே மாறி உள்ளது என கூறலாம். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வதை கனவாக வைத்து பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

அதே போல ஒலிம்பிக் தொடரில் நடத்த படும் மகளீருக்கான 50கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்து, நேற்றைய நாள் 100 கிராம் அதிகம் இருப்பதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது நேற்றைய பெரும் சர்ச்சையாக வெடித்தது, வினேஷ் போகத்திற்க்காக பல நடிகைகள், விளையாட்டு துறை சார்ந்தவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், அவர் அன்று இரவு முழுவதும் எடையை குறைப்பதற்காக மேற்கொண்ட பயிற்சியில் நீர்சத்து குறைப்பாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மல்யுத்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக வருத்தம் நிறைந்த ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் தோற்று விட்டேன். உங்கள் கனவு, எனது தைரியம் எல்லாம் உடைந்து விட்டது. எனக்கு போராட மனதில் உறுதியில்லை.

மல்யுத்தத்துக்கு (2001-2024) குட்பை. அனைவரும் என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவுக்காக மல்யுத்த போட்டியில் களம் கண்ட வினேஷ் போகத் தொடர்ந்து இந்தியாவுக்காக பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மேலும் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கிலும் பல வெற்றிகளை கண்டு, தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வினேஷ் போகத்தின் ஓய்வு முடிவு இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…

3 minutes ago

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

28 minutes ago

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…

50 minutes ago

“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…

2 hours ago

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…

2 hours ago