ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகக்கோப்பை டி-20 தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்பொழுது இதுவும் நடப்பதற்கு வாய்ப்புகள் கம்மிதான். ஏனெனில், 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வரவேண்டும். அதுமட்டுமின்றி, அந்தந்த நாடுகளின் அரசு மற்றும் ஆஸ்திரேலியா அரசும் அனுமதி வழங்கவேண்டும்.
மேலும், டி-20 போட்டிகள் தள்ளிவைப்பது குறித்து முடிவுகளை மே 28 ஆம் தேதி ஐசிசி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனைக்கு பின்னர் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுகுறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…