நியூசிலாந்திற்கு பின்னடைவு .! டி20 தொடர்ந்து ஒருநாள் தொடரில் விலகிய கேன் வில்லியம்சன் .!

Published by
Dinasuvadu desk
  • நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர்  தொடங்க உள்ளது.கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் விலகி உள்ளார்.
  • கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் ஏற்பட்ட காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் வில்லியம்சன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.அதில் முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு போட்டியின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் விலக்கியதை தொடர்ந்து  நியூஸிலாந்து கேப்டனாக டிம் சௌத்தி செயல்பட்டார்.

இதையெடுத்து நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர் தொடங்க உள்ளது. கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.இதனால் நியூஸிலாந்து அணிக்கு  கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வருகின்ற பிப்ரவரி 11 -ம் தேதி நடைப்பெறவுள்ள 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன்  கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேன் வில்லியம்சனுக்கு பதிலாக  மார்க் சேப்மேன் நியூஸிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago