இந்தியா ,நியூசிலாந்து இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இன்னும் குணமாகாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிசிசிஐ , நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு எதிராக மயங்க அகர்வால் களமிறங்குவர் என தெரிவித்து உள்ளது.
இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய போது ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்த போது அவருக்கு இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…