சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!

Published by
பால முருகன்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழப்பிற்கு  158 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா நீண்ட மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட வந்த காரணத்தால் ரசிகர்களுக்கு அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோஹித் 0 ரன்னில் ரன் -அவுட்  ஆனார்.

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு ரன்-அவுட் ஆனது பற்றியும் போட்டியில் வெற்றிபெற்றது பற்றியும் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ரன்-அவுட் ஆனது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விஷயம். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த மாதிரி நடப்பது எல்லாம் ஒரு சாதாரணமான விஷயம் தான் எனவே இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அதிரடி காட்டிய சிவம் துபே…இந்திய அணி அபார வெற்றி ..

நான் அவுட் ஆகி களத்தை விட்டு வெளிய சென்றபிறகு சுப்மன் கில் நல்ல தொடக்கம் கொடுத்து அணியை கொண்டு செல்ல விரும்புனேன். அவரும் நன்றாக விளையாடினார் அவருக்கு அடுத்ததாக இறங்கிய ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மாவும் நன்றாக விளையாடினார்கள். இந்த போட்டியில் நாங்கள் எல்லா விதத்திலும் அருமையாக செயல்பட்டதாக நினைக்கிறோம்.

பேட்டிங்கில் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். இங்கு குளிர்அதிகமாக இருந்த காரணத்தால் முதலில் பந்து கையில் பட்டவுடன் மிகவும் வழிகொடுத்தது பிறகு நேரம் ஆக ஆக சரியாகிவிட்டது. போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

8 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

8 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

9 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

12 hours ago