Ronaldo 200 [Image- Twitter/@selecaoportugal]
கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் என்ற வரலாறை படைத்துள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐஸ்லாந்துக்கு எதிரான UEFA யூரோ 2024 தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ இந்த போட்டியில் 89வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ரொனால்டோவின் இந்த சாதனையை குறிக்கும் வகையில் அவருக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழும் போட்டிக்கு முன்னதாக வழங்கப்பட்டது. ரொனால்டோ கடந்த 2003 ஆம் ஆண்டு கஜகஸ்தானுக்கு எதிராக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஆடவர் கால்பந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார், இதனை போர்ச்சுகல் அணியும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…