SachinTendulkar [File Image]
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர்.
ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பெலிண்டா கிளார்க். இவர் 1997 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 16ம் தேதி) நடந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் போது டென்மார்க் அணிக்கு எதிராக விளையாடினார்.
அந்த போட்டியில் 155 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 229* ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் நபர் என்ற சாதனையை ஐசிசி ஹால் ஆஃப் பேமர் பெலிண்டா கிளார்க் படைத்தார். அடுத்த 13 ஆண்டுகளுக்கு இந்த சாதனையின் ஒரே உரிமையாளராக இருந்தவர் பெலிண்டா கிளார்க் மட்டுமே. இதன் பிறகே சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை எட்டினார்.
சச்சின் டெண்டுல்கர் 2010 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் ஆண் கிரிக்கெட் வீரர் ஆவார். பிப்ரவரி 2010 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 200* ரன்கள் எடுத்தார். மேலும், பெலிண்டா கிளார்க் இந்த ஒரு சாதனை படைத்தவர் மட்டுமல்ல. அவர் 1994ம் ஆண்டு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனாக மாறினார். அவரது தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…