ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.குழந்தை பெற்றெடுத்து விளையாட்டில் இருந்து நீண்ட ஓய்விற்கு பின்னர் சானியா மிர்சா விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் பவுஸ்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சானியா ஜோடி 7-6 , 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இதனால் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி எதிர்த்து விளையாடியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சானியா ஜோடி 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்றது.சானியா மிர்சா – நடியா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…