வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் சதி.? விஜேந்தர் சிங் பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
கெளதம்

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதி போட்டியில் தனது எடையை குறைப்பதற்காக நேற்றைய நாள் இரவு முழுவதும் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், வெறும் 100 கிராம் எடை கூடியதன் காரணமாக சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது.

இந்நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்தது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனால் பல அரசியல் கட்சி தலைவர்கள், பல முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர்கள் அவர்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் குத்து சண்டை வீரரான விஜயேந்தர் கூறியதாவது, “மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு பின்னால் சதி இருக்கிறது. எங்களை போன்ற குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையை குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

பசி, தூக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதை பிடிக்காதவர்கள் செய்த சதியாக பார்க்கிறேன்”, என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Recent Posts

இன்று முதல் ஜூலை 5 வரை பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…

8 minutes ago

உங்க முன்னாள் மனைவிக்கு மாசம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்கணும்! முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…

43 minutes ago

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…

1 hour ago

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

2 hours ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

2 hours ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

12 hours ago