Shivam Dube about ms dhoni [file image]
நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே 40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார்.
இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று 17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஷிவம் துபே ” ஒரு பினிஷராக எப்படி விளையாடவேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக்கொண்டேன் என ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி ஒரு முக்கியமான போட்டியில் இப்படி விளையாட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கான வாய்ப்பு வரும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்தபோது, போட்டியை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன்.
சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!
எப்படி முடிக்கவேண்டும் என்பதனை ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய போது எம் .எஸ்.தோனியிடம் இதனை கற்றுக்கொண்டேன். ஐபிஎல் போட்டிகளில் நான் சென்னை அணியில் விளையாடும் போது தோனியிடம் எதாவது பேசிக்கொண்டே இருப்பேன்.அவ்வளவு பெரிய ஜாம்பவான் அவர். அவருடன் நாம் விளையாடும்போது பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். என்னுடைய ஆட்டத்தை பார்த்து அவர் சில நேரங்களில் பாராட்டி இருக்கிறார். அதையெல்லாம் மறக்கவே முடியாது.
அவர் பல சமயங்களில் என்னை தொடர்ச்சியாக பாராட்டியதன் காரணமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தை எனக்கு அளிக்கிறது, இதன் காரணமாக எனது நம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது” எனவும் ஷிவம் துபே தோனியை பற்றி பேசியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…