என் மனைவிக்கு வழங்கிய சிறப்பு பரிசு.! இது மறக்க முடியாத இரவு -கோலி.!

Published by
murugan
  • போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி ,எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசு.
  • அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும் என கோலி கூறினர்.

கடந்த 11-ம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் கே.எல் ராகுல் 91 , துணை கேப்டன் ரோகித் சர்மா 71  , கேப்டன் விராட் கோலி 70 ரன்கள் குவித்தனர்.இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி 241 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக வைக்கப்பட்டது.

ஆனால் பின்னர் இறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போட்டி முடிந்த பின் பேசிய விராட் கோலி , முதலில் பேட்டிங் செய்தால் எப்படி வெற்றி பெறுவது குறித்து பல பேசி இருந்தோம்.ஆனால் களத்தில் திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம். என் பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்த  ஒரு வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது.

நான் கே.எல் ராகுலிடம் நீ கடைசிவரை நின்று விளையாடு நான் மறு பக்கம் அதிரடி ஷாட்டுகளை வெளிப்படுத்துகிறேன் என கூறி அதன்படியே விளையாடினேன். என்னால் மூன்று வடிவிலான போட்டியிலும் ரன் குவிக்க முடியும். எல்லாமே மனம் கவனம் செலுத்துவதில் தான் இருக்கிறது.

விராட் கோலி மேலும் கூறுகையில், இன்னொரு வகையில் இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. எனக்கு திருமணமாகி இன்றுடன் (புதன்கிழமை உடன் ) இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசு. அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும்’ என கூறினார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago