டி20 உலகக் கோப்பை: நியூயார்க் நகரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் மீதுதான் உள்ளது. அதன்படி, ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க அங்கு நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கனடா, நேபாளம், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

இதற்காக தகுதி பெற்ற அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மற்றும் வீரர்கள் தேர்வில் இறங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான புதிய லோகோவையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவுக்கு காயம்… கேப்டனாக ஜடேஜா.. நடந்தது என்ன?

கிரிக்கெட் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான், வேறு எந்த அணி விளையாடினாலும், இந்த  அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு மிகப்பெரிய போட்டியாகும், கடைசியாக ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திருந்தது. தற்போது, டி20 உலகக்கோப்பை தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி நியூயார்க்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.

தி கார்டியனின் கூற்றுப்படி, நியூயார்க்கில் 34,000 பேர் அமரும் திறன் கொண்ட பாப்-அப் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடத்தப்படும் என்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் இந்த நகரத்தில் வசிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, புதுடெல்லிக்கும் நியூயார்க்கிற்கும் இடையேயான 10-அரை மணி நேர வித்தியாசத்தை கருத்தில் கொண்டு, இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களை கருத்தில் கொண்டு சில இந்திய போட்டிகள் அங்கு நடத்த திட்டமிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

24 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago