டி20 உலகக்கோப்பை :ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி .!

Published by
Dinasuvadu desk
  • ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
  • இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷைபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஹர்மன்பிரீத் கவுர் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ஷைபாலி வர்மா 29 ரன்களுடன் வெளியேற பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 , ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

Image

இதையெடுத்து இறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டை பறித்தார்.

133 ரன்கள் இலக்குடன்  ஆஸ்திரேலிய அணியின்  தொடக்க வீராங்கனைகளாக  அலிஸா ஹீலி ,பெத் மூனி இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அலிஸா ஹீலி அதிரடியாக விளையாடி வந்தார்.ஆனால் எதிர்முனையில் இருந்த பெத் மூனி 6 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இறங்கிய  கேப்டன் மெக் லானிங் (5) ,ரேச்சல் ஹெய்ன்ஸ் (6) ரன்னில் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அலிஸா ஹீலி அரைசதம் அடித்து 51 ரன் எடுத்தார். பிறகு மத்தியில் இறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பூனம் யாதவ் 4 ,ஷிகா பாண்டே 3 விக்கெட்டை பறித்தனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago